கன்னடத்தில் ஒரு போதும் பேச மாட்டேன்; எஸ்பிஐ ஊழியர் கொதிப்பு - வீடியோ வைரல்
எஸ்பிஐ ஊழியர் கன்னடத்தில் பேச மாட்டேன் என கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஊழியர் காட்டம்
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார்.
அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகா நீங்கள் எங்கள் மொழியில் தான் பேச வேண்டும் என சொல்ல, அந்த வங்கி மேலாளரோ, “நான் ஒரு போதும் கன்னடத்தில் பேச மாட்டேன். இந்தியில் தான் பேசுவேன்” என அவரிடம் கூறியிருக்கிறார்.
வைரல் வீடியோ
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் வட மாநில இளைஞர் ஒருவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் இந்தியில் பேச,
Bengaluru Chandapura SBI Branch Manager says "she will never speak Kannada" as this is India and she speaks Hindi
— 👑Che_Krishna🇮🇳💛❤️ (@CheKrishnaCk_) May 20, 2025
RBI has given clear guidelines saying staff should provide service in the local language@TheOfficialSBI
better take action against her.pic.twitter.com/llkqTjsW7R
தனது தாய் மொழியான கன்னடத்தில் பேச வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் சொல்ல, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.