சிறையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரத போராட்டம்? பரபரப்பு தகவல்!

Tamil nadu Cuddalore
By Sumathi Sep 30, 2022 12:00 PM GMT
Report

சிறையில், சவுக்கு சங்கர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுக்கு சங்கர் 

நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது மத்திய கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரத போராட்டம்? பரபரப்பு தகவல்! | Savukku Shankar Is On A Hunger Strike

இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது அரசுப் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருக்கும் அவரை பார்வையாளர்கள் சந்திக்க மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறையில் உண்ணாவிரதம்?

இந்நிலையில் பார்வையாளர்களைப் பார்க்க அனுமதி மறுப்பது மற்றும் 24 மணிநேரமும் தனிமை சிறையில் வைத்திருப்பது ஆகியவற்றுக்காக சவுக்கு சங்கர் நாளை முதல் சிறையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் இந்த போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.