நெல் பயிர்களையும், தமிழ்நாட்டு விவசாயிகளையும் காப்பாற்றுங்கள் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Aug 04, 2023 11:08 AM GMT
Report

காவிரி டெல்டாவின் தற்போது உள்ள குறுவை நெல் பயிர்களையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நெல் பயிர்களையும், தமிழ்நாட்டு விவசாயிகளையும் காப்பாற்றுங்கள் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் | Save The Farmers M K Stalin Letter To Pm Modi

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், தமிழ்நாடு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், தென்மேற்கு பருவமழையின் போது மிகக் குறைவான மழைப்பொழிவைப் பெறுவதாகவும், குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை, குறிப்பாக கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளது.

மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த உத்தரவை கர்நாடகம் முழுமையாக மதிக்கவில்லை. மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை" என்று எழுதியுள்ளார்.

மேலும், " 2023-2024-ம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31-ம் தேதி வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டிஎம்சி தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.

கர்நாடகாவில்,நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டிஎம்சியில், 91 டிஎம்சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ள போதிலும், கர்நாடக அரசு 28.8 டிஎம்சி அளவிற்கு பற்றாக்குறையாக தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட்டுள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில், 2023, ஆகஸ்ட் 2-ம் நாளன்று நிலவரப்படி, 26.6 டிஎம்சி. அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.

இது குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். குறுவை நெற்பயிர் முதிர்ச்சியடைந்து, அதிக மகசூல் பெற, இன்னும், 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.

இத்தகைய ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் அவர்களிடம் கடந்த ஜூலை 5 மற்றும் 19 தேதிகளில் இப்பிரச்சினையை எடுத்துச் சென்று, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த விநியோக அட்டவணையைக் கடைபிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறும், இதனை முறையாக கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தினை அறிவுறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும், கர்நாடக அரசு இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது.

கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 சதவீத அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும், அவற்றிற்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை. 

இருப்பினும், கர்நாடக அரசு இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது.

கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 சதவீத அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும், அவற்றிற்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை. 

அத்துடன்," உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும், கர்நாடக அரசுக்கு இந்திய பிரதமர், உரிய அறிவுரைகளை வழங்குவதோடு, இதனை உறுதி செய்வதற்கு தேவையான அறிவுரைகளை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்கிட வேண்டும்" என்றும் கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.