இந்தியா உள்பட 14 நாடுகளுக்கான விசா நிறுத்தி வைப்பு - காரணம் என்ன?
இந்தியா உள்பட 14 நாடுகளுக்கான விசாவை நிறுத்தி சவுதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிளாக் வொர்க் விசா
சவுதி அரேபியா ஜூன் மாதம் வரை இந்தியா உள்பட 14 நாடுகளுக்கான பிளாக் வொர்க் விசா வழங்கும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இங்கு ‛பிளாக் வொர்க் விசா' அனுமதி இருந்தால் மட்டுமே ஒரு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து பணிக்கு ஆட்களை சேர்க்கும்போது அவர்களுக்கு ‛என்ட்ரி விசா' என்பது வழங்கப்படும்.
ஹஜ் பயணம்
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேஷியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன், மொராக்கோ உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்வதற்கான ‛பிளாக் வொர்க் விசா' ரத்து செய்யப்பட்டுள்ளது.
சவுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணத்துக்கு அதிகமான இஸ்லாமியர்கள் செல்வார்கள். கடந்த ஆண்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலி நடந்தது. இதற்கு ஹஜ் விசாவை தவிர்த்து பிற விசாக்களை பயன்படுத்தி சவுதிக்கு சென்றவர்கள் புனித யாத்திரை மேற்கொண்டது தான் காரணம் என்று கூறப்பட்டது.
ஜூன் மாதம் இறுதியில் ஹஜ் யாத்திரை என்பது முடிவுக்கு வரும். அதன்பிறகு மீண்டும் இந்த விசா பட்டியலில் உள்ள 14 நாடுகளுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்தமுடிவை சவுதியின் மனிதவள மேம்பாடு மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சகம் எடுத்து அறிவித்துள்ளது.