விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் நிர்வாணமாக ஊர்வலம் செல்வேன்..!மிரட்டிய மனைவி..
சவுதி அரேபியாவில் பெண் ஒருவர் தன் கணவனிடம் விவகாரத்து கேட்டும் கொடுக்கவில்லை என்றால் நிர்வாணமாக ஊர்வலமாக செல்வேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது கணவரிடம் விவாகரத்து கேட்ட பெண் கொடுக்கவில்லை என்றால் நிர்வாணமாக ஊர்வலமாக செல்வேன் என்று அதிரடியாக மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ஷரியா நீதிமன்றத்தை நாடியுள்ளார்.அப்போது இந்த விவகாரத்து வழக்கில் எனக்கு உடன்பாடு இல்லை எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.
இதையடுத்து அவரது வழக்கை மறுத்துவிட்டது நீதிமன்றம்.ஷரியா சட்டத்தின்படி விவாகரத்திற்கான காரணம் அமைந்து விட்டது என அவரிடம் தெரிவித்து அதனை உறுதிப்படுத்தி உள்ளது.
சவுதி அரேபியாவில் விவாகரத்து விகிதங்கள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு மணிநேரத்திற்கு 7 வழக்குகள் பதிவாகின்றன என அந்நாட்டு புள்ளியியலுக்கான பொது அமைப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்கு திகைக்க வைக்கும் வகையில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டன என்றும் தெரிவித்து உள்ளது.