சனி பெயர்ச்சி 2022 - நாளை முதல் இந்த 6 ராசிகளுக்கு கொட்டப்போகும் பணமழை

By Nandhini Apr 28, 2022 06:01 AM GMT
Report

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியவர் சனிபகவான். இந்த ஆண்டு சனி பகவான் அதிசார பெயர்ச்சியாக நாளை (ஏப்ரல் 29ம் தேதி) மகரத்திலிருந்து கும்பத்திற்கு செல்ல இருக்கிறார்.

இந்த சனி பெயர்ச்சியால் அவரின் கெடுபார்வையிலிருந்து விலகக்கூடிய ராசியினர் திடீர் அதிர்ஷ்டமும், கோடீஸ்வர யோகமும் பெற இருக்கிறார்கள்.

சனி அதிசார பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கெல்லாம் யோகங்களை கொடுக்கப்போகிறார் என்று பார்ப்போம் -

மேஷம் -

தொழில் காரகன் லாப ஸ்தானத்திற்கு செல்வதால், புதிய வேலை தேடுதல், வேலை சார்ந்த தேர்வு போன்ற விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ​

மிதுனம் -

மிதுன ராசிக்காரர்கள் அதிசார சனி பெயர்ச்சியால் 75 நாட்கள் அஷ்டம சனி பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். இதனால், சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கி உங்களுக்கு வர வேண்டிய, பணம் வந்து சேரும்.

ரிஷபம் -

கோள்சார ரீதியாக ரிஷப ராசிக்கு 10ல் சனி அதிசாரமாக செல்வதால் நீங்கள் செய்யக்கூடிய தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கன்னி -

6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் சனி பகவானின் சஞ்சாரம் நிகழ உள்ளது. தொழில், வேலை தொடர்பான தடை, எதிரிகளின் தொல்லைகள் தீரும். ​

துலாம் -

துலாம் ராசிக்கு இதுவரை இருந்த அர்த்தாஷ்டம சனி முடிந்து பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால், பஞ்சம சனி தொடங்க உள்ளது. வீடு, மனை, சொத்து வாங்குதல், வண்டி, வாகனம் போன்ற விஷயங்களை வாங்கும் முயற்சி கைக்கூடும் வாய்ப்பு உள்ளது.

தனுசு -

தனுசு ராசிக்கு 3ம் வீடான முயற்சி, தைரிய, வீரிய ஸ்தானத்தில் சனி பகவானின் சஞ்சாரம் நிகழ உள்ளது. சனியின் அதிசாரத்தால் பாத சனி விலகி சகாய சனிக்கான பலன்கள் கிடைக்க உள்ளது. எப்போதும் கையில் அதிக பணப்புழக்கம் இருக்கக்கூடிய காலமாக இருக்கப்போகிறது.