சித்தார்த்தை எதிர்த்த கன்னடர்கள்...நாங்களும் திருப்பி ஆரம்பிச்சோம்'னா..எச்சரிக்கை செய்யும் நா.த.க
நடிகர் சித்தார்த்தை பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கண்டித்த கன்னட அமைப்புகளுக்கு நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சித்தார்த் நிகழ்ச்சியில் சலசலப்பு
தமிழகம் கர்நாடகம் காவிரி நதிநீர் பிரச்சனை தற்போது மீண்டும் பெரிய மோதல்களை பெற்றுவருகின்றது. காவிரி மேலாண்மை ஒழுங்காற்று வாரியத்தின் அறிவுறுத்தலை ஏற்று கர்நாடக அரசு ஒருசொட்டு தண்ணீரை கூட திறக்கக்கூடாது என கன்னட அமைப்புகள் இன்று மாநிலம் முழுவதும் பந்த் அறிவித்துள்ளனர்.இதன் காரணமாக அங்கு 144 தடை இன்று முழுவதும் போடப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் நேற்று நடிகர் சித்தார்த் தன் நடிப்பில் வெளியான "சித்தா" படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த கன்னட அமைப்புகளை சேர்ந்த பலர் திடீரென நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து பெரும் இடஞ்சல்களை அளித்தனர்.
சாட்டை துரைமுருகன் கண்டனம்
இதன் காரணமாக அங்கு பெரும் சலசலப்புகள் ஏற்பட நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் டென்ஷன் ஆன சித்தார்த்த் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அமைப்பினரை கைது செய்து வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். இதற்கிடையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், நடிகர் சித்தார்த் அவர்களை பேச விடாது தடுத்து அனுப்பியிருக்கிற கன்னட இனவெறியர்களின் போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது - கன்னட நடிகர்கள் தமிழ்நாட்டில் பெரிதும் நடிக்கிறார்கள் என்பது இந்த இனவெறி கும்பலுக்கு தெரியுமா தெரியதா? - பதிலுக்கு நாங்கள் செய்ய ஆரம்பித்தால் ஒரு கன்னட நடிகர்களின் படம் தமிழ்நாட்டில் ஓடாது ! - முதல்வரே கொஞ்சம் கூட உங்களுக்கு கோவம் வரவில்லையா என வினவி இருக்கின்றார்.
நடிகர் சித்தார்த் அவர்களை பேச விடாது தடுத்து அனுப்பியிருக்கிற கன்னட இனவெறியர்களின் போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது
— Duraimurugan (@Saattaidurai) September 28, 2023
கன்னட நடிகர்கள் தமிழ்நாட்டில் பெரிதும் நடிக்கிறார்கள் என்பது இந்த இனவெறி கும்பலுக்கு தெரியுமா தெரியதா?
பதிலுக்கு நாங்கள் செய்ய ஆரம்பித்தால் ஒரு கன்னட நடிகர்களின்… https://t.co/E7Trj80WxK