சசிகலாவை சரியாக காட்டியுள்ளது தலைவி : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar thalaivi
By Irumporai Sep 10, 2021 01:51 PM GMT
Report

 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த திரைப்படத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள திரையரங்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள தலைவி படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வரலாற்றை திரித்து கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறிய ஜெயக்குமார் .

திமுகவிடம் கணக்கு கேட்டதைத் தொடர்ந்தே எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அமைச்சர் பதவி கேட்டே திமுகவை விட்டு பிரிந்ததாக படத்தில் காட்சி வந்திருப்பது தவறு. ஆகவே, அந்தக் காட்சியை நீக்க வேண்டும் எனக் கூறினார்.

அதே சமயம் ஒட்டுமொத்தமாக பார்த்தால் சிறப்பான படம். திமுகவிற்கு ஆதரவான வகையிலேயே படம் வெளியிடப்பட்டுள்ளது. எம்ஜிஆரை ஜெயலலிதா அவமதிப்பது போல் இருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும். எம்ஜிஆரை மதிக்காமல் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியவில்லை.

சசிகலாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றும், அவர், வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர் என்பதையும் தலைவி படத்தில் சரியாக காட்சிப்படுத்தியுள்ளனர் எனக் கூறினார்.