பிரபாகரன் தற்போது நரகத்தில்தான் உள்ளார்... அங்கு போய் கூட்டி வாருங்கள்... - சரத் பொன்சேகா..!
பிரபாகரன் தற்போது நரகத்தில்தான் உள்ளார் என்றும், அங்கு போய் கூட்டி வாருங்கள் என்று இலங்கை எம்.பி.யான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகா தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் -
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்திப்பின்போது, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் இருக்கிறார் என்று தெரிவித்தார்.
அவருடன் நான் தொடர்பில் உள்ளேன். அவர் மனவி, மகளும் நலமுடன் இருக்கிறார்கள். அவர் தக்க நேரத்தில் மக்கள் முன் வருவார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து சொல்ல முடியாது என்று தெரிவித்தார். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்த இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழ.நெடுமாறனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை ராணுவம் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரபாகரன் தற்போது நரகத்தில்தான் உள்ளார்
இந்நிலையில், இது குறித்து இலங்கை எம்.பி.யான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகா பேசுகையில்,
பிரபாகரன் தற்போது நரகத்தில்தான் உள்ளார். பல லட்சக்கணக்கான பொதுமக்களை கொலை செய்தவர்தான் பிரபாகரன். இதனால்தான் அவர் நரகத்தில் உள்ளார். பிரபாகரனை அழைத்துவர விரும்பினால் பழ.நெடுமாறனும் நரகத்துக்குதான் செல்ல வேண்டும். அங்குபோய்தான் பிரபாகரனை அழைத்து வர வேண்டும்.
14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்யையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வருகிறார். பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான சார்லஸ் அன்ரனி, பாலச்சந்திரன் மற்றும் மகள் துவாரகா ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டனர். பிரபாகரன் குடும்பத்தில் எவரும் தப்பவில்லை.
இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு பிரபாகரனின் பெயரை உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியவே முடியாது. அவர்களில் ஒருவர்தான் இந்த பழ.நெடுமாறன். அவர் இறுதிப்போர் நிறைவடைந்த காலத்திலிருந்து இன்று வரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பொய் கூறிக்கொண்டு வருகிறார்.
தற்போது அவர், பிரபாகரன் மட்டுமன்றி அவரின் மனைவியும், மகளும் உயிருடன் இருக்கிறார்கள் என்று பொய்யான தகவலை கூறி தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.