வீட்ல சும்மாதான்ப்பா இருக்கேன்... - உருக்கமாக பேசிய சந்தானம்

Santhanam
By Nandhini Aug 26, 2022 02:02 PM GMT
Report

வீட்ல சும்மா தான்ப்பா இருக்கேன். மீண்டும் காமெடியனாக நடிக்கிறேன் என்று நடிகர் சந்தானம் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். 

சந்தானம்

நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி காமெடியனாக நடித்தார். இவருடைய காமெடியில் பெருமளவு ரசிகர்களை பெற்றார். இதனால், மக்களிடையே பிரபலமானார். இந்த புகழையடுத்து நடிகர் சந்தானத்திற்கு பெரியத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

2004ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘மன்மதன்’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இப்படம் ஹிட்டடித்ததால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ், சிம்பு, ஆர்யா, மாதவன் என அனைத்து கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியான நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், காமெடி நடிப்பில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

Santhanam

ஹீரோவான சந்தானம்

நடிகர் சந்தானம் 2014ம் ஆண்டு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ‘இனிமே இப்படித்தான்’, ‘A1’ உள்பட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

மீண்டும் காமெடியில் நடிக்கத் தயார்

நேற்று சென்னையில் ‘கேப்டன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் பேசுகையில், ஆர்யா எனக்கு போன் செய்தார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன் 2’ படம் நடித்தில் காமெடியனாக நடிக்க தயாராக என்று கேட்டார். நான் காமெடியனாக நடிக்கத் தயார் என்று கூறினேன்.

வீட்டில் என்ன பண்ற... என்று ஆர்யா கேட்டார். அதற்கு நான் வீட்ல சும்மா தான் இருக்கேன் என கூறினேன். சரி இங்கயும் வந்து சும்மா இரு அப்டினு சொல்லி தான் என்னை இந்த நிகழ்ச்சிக்கு ஆர்யா அழைத்தார் என்று நகைச்சுவையாக சந்தானம் கூறினார்.