சர்சையினை கிளப்பிய மருத்துவ உறுதிமொழி : மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் ஆலோசனை

By Irumporai May 04, 2022 05:18 AM GMT
Report

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்துகின்றார்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பிற்பகலில் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தது சர்ச்சையான நிலையில், தற்போது மருத்துவக்கல்லுரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேர்ற்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ,சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை, மருத்துவக் கழிவுகளை கையாள்வது மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் மற்றும் கல்லூரி டீனுடன் மருத்துவ கல்வி இயக்குநர் விசாரணை நடத்திய பிறகு விளக்கம் அளித்திருந்தார்.

அதேபோல் ராமநாதபுரத்தில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில், இன்றைய தினம் அனைத்து கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்த உள்ளார்.