மொட்டையடித்துக் கொண்ட பிரபல நடிகை - வெளியான அதிர்ச்சி காரணம்
பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி மொட்டையடித்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா துறையில் இருக்கும் பலரும் தங்களின் அழகுக்கு அதிக கவனம் செலுத்துவது நாம் அறிந்த ஒன்றே. முக அழகும், உடல் அழகும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்வார்கள். கிட்டதட்ட நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் இதில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இவர்களில் சிலர் இயற்கையான முகமும், தோற்றமும் அழகே என தங்களை தனித்து காட்டக்கூடியவர்களும் உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்த நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும் நடிகையுமான சஞ்சனா கல்ராணி திடீரென தலையை மொட்டை அடித்து கொண்ட போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சஞ்சனா கல்ராணி கன்னடம் மற்றும் தமிழில் நடித்து உள்ள நிலையில் கடந்த ஆண்டு போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். தற்போது சிறையில் ஜாமீன் கிடைத்த பிறகு வெளியில் வந்த இவர் கடந்த வருடம் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர், பார்ப்பவரின் கண்களில் தான் அழகு என்பது இருக்கிறது. அதனால் நான் என் தலைமுடி முழுவதையும் தியாகம் செய்தேன். நான் கடவுளிடம் என் மனதை முழுவதுமாக கொடுப்பதற்கு இதை செய்துள்ளேன். எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்த பிறகு... வாழ்க்கை தற்போது அழகாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் நான் இப்படியாக இருக்க விரும்புகிறோம். எனக்கு கடவுள் கொடுத்த அனைத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.
இவரது சகோதரி நிக்கி கல்ராணிக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.