டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம்..!

Delhi Government Of India
By Thahir Jul 31, 2022 09:51 AM GMT
Report

டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த சஞ்சய் அரோரா 

தமிழகத்தில் இருந்து 1988ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றினார். தமிழக காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்தார்.

சிறப்பு அதிரடி படையிலும், சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்புடன் செயல்பட்டதற்காக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான விருதும் பெற்றார்.

Sanjay Arora

தேசிய பாதுகாப்பு பணியில் பயிற்சி பெற்ற பின்னர் 1991-ம் ஆண்டு சிறப்பு பாதுகாப்பு படை அமைப்பதில் முக்கிய பாங்காற்றியவர்.

டெல்லி காவல் ஆணையாளராக நியமனம்

2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கோவை நகர காவல் ஆணையாளராக பணியாற்றினார். விழுப்புரம் சரக டிஐஜியாகவும், ஊழல் கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

Sanjay Arora

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி இந்தோ- திபெத் எல்லை காவல் படையின் டி.ஜியாக பதவியேற்ற அவர்,குடியரசு தலைவரின் காவல்துறை பதக்கம், ஐ.நா அமைதி குழு பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களையும் பெற்றுள்ளார். தற்போது இவர் டெல்லி மாநகர காவல் ஆணையாளராக பதவியேற்றுள்ளார்.