காதலி இறந்த சோகத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை - சோகச் சம்பவம்

samugam-viral-news
By Nandhini Sep 27, 2021 06:51 AM GMT
Report

பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கில் இளைஞரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்தவர் வினித் குமார். இவரும், பெரியார் திடலை சேர்ந்த சுபஸ்ரீயும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். சுபஸ்ரீ அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாள். பள்ளிக்கு செல்லும்போது இருவரும் நெருங்கி காதலித்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அவர்களுக் குள்ளாகவே ஏற்பட்ட சில பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளான சுபஸ்ரீ, சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னால் தானே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதால் வினோத் குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணம் வினோத்குமார் தான் காரணம் என்று அவரின் பெற்றோர் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரை பதிவு செய்த போலீசார், வினித் குமார் குடும்பத்தினரிடம் விசாரித்து விட்டு சென்றுள்ளனர்.

ஏற்கெனவே காதலி இறந்த சோகத்தில் இருந்து வந்த வினித்குமாருக்கு போலீஸ் தன்னை பற்றி விசாரித்தது தெரிந்தவுடன் மேலும் மன உளைச்சல் ஆளாகியுள்ளனர்.

இதனால் வீட்டின் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று அங்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் கீழ்வேளூர் போலீசாருக்கு சென்றனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, வினித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   

காதலி இறந்த சோகத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை - சோகச் சம்பவம் | Samugam Viral News