மனைவி சுட்ட தோசை கருகியதால் தகராறு - கணவன் எடுத்த விபரீத முடிவு!
கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் பழனி (52). இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பழனி நேற்று வீட்டில் சாப்பிடும்போது அவரது மனைவி தோசை சுட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அதில் ஒரு தோசை கருகி இருந்தது. இதனால் கோபமடைந்த பழனி, இதுகுறித்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால், இருவருக்கும் பயங்கரமான சண்டை வந்தது.
பின்னர், சிறுது நேரம் கழித்து பழனி தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். ரொம்ப நேரம் ஆகியும் வெளியேவராததால் மனைவிக்கு சந்தேகம் வந்தது. உடனே கதவை தட்டி பார்த்துள்ளார். கதவு திறக்கவில்லை. இதனால், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் திறந்து பார்த்தபோது, பழனி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சிங்காநல்லூர் போலுசார் விரைந்து வந்து, உடலை மீட்டனர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.