6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - குற்றவாளி தலைமறைவு - அதிர்ச்சி சம்பவம்!

By Nandhini Sep 13, 2021 04:50 AM GMT
Report

ஐதராபாத்தில் ஒரு நபரால் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 6 வயது சிறுமியை அதே பகுதியில் வசித்து வந்த 30 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். விளையாட சென்ற சிறுமி வெகு நேரம் ஆகியும் வராததால் சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்தார்கள். இந்த புகாரை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமி அண்டை வீட்டுக்கு சென்றது உறுதியானது. இதனையடுத்து, அண்டை வீட்டில் சோதனை செய்தபோது, சிறுமியின் உடல் மறைக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அண்டை வீட்டில் வசிக்கக்கூடிய ராஜு தலைமறைவாகி இருப்பதால் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமியின் சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ராஜு மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டிவிட்டரில் #JusticeForChaitra என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 30 வயது நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. த்து வருகிறது.