இவர்தான்ப்பா ரியல் ஹீரோ... ஓடும் ரயிலில் ஒரு நொடியில் பயணியின் உயிரை காப்பாற்றிய காவலர் - திக்திக் வீடியோ வைரல்
ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது ரயில்வே பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலரை சமூகவலைத்தளங்களில் பலர் பாராட்டி வருகிறார்கள்.
ஒரு நபர் ரயிலில் ஏற முயன்று நுழிலையில் உயிர் தப்பிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முழு ஊரடங்கான விடுமுறையை கழித்து விட்டு மகராஷ்டிரா மாநிலம் வசாய் ரயில் நிலையத்தில் ஒருவர் மும்பை ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது, மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் வசாய் ரயில்வே நிலையத்திலிருந்து கிளம்பியது.
அங்கு ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர் ரயிலில் ஏற முயன்று தவறி ரயில்வே பிளாட்பாரத்தில் கீழே விழுந்தார். கீழே விழுந்தவரை ரயில் சென்றபோது அவரது கால்கள் படிக்கட்டில் மாட்டிக் கொண்டது. வெளியே வர முடியாமல் தவித்தார்.
எதிர்பாராதவிதமாக நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே பறிதவித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அப்போது, அங்கு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மின்னல் வேகத்தில் ஓடிவந்து அவரது உயிரை காப்பாற்றினார். தற்போது இது குறித்த சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.