குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து - பரபரப்பு சம்பவம்
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் உள்ள ராணுவ மையத்தில் ஹெலிகாப்டர் மூலம் பயிற்சி மேற்கொண்டபோது, அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
காட்டேரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் 14 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இதில், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், அதில் பயணித்த ராணுவ உயரதிகாரி நிலைமை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என நீலகிரி ஆட்சியர் அம்ரித் தகவல் தெரிவித்திருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர், ராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் 4 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ராணுவ தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை.
#BREAKING | நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து
— ABP Nadu (@abpnadu) December 8, 2021
விபத்துகுள்ளான ஹெலிகாப்டரில் மூத்த அதிகாரிகள் இருந்ததாக தகவல்https://t.co/wupaoCQKa2 | #Nilagiri | #Accident | #helicopter pic.twitter.com/gOu3qQOLvC