பேருந்தில் அத்துமீறிய இளைஞரை செருப்பால் பளார்.. பளார்ன்னு அடித்த பெண் - வைரலாகும் வீடியோ
பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் அத்துமீறிதால் பெண் ஒருவர் செருப்பால் அடிக்கும் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணை, அந்த இளைஞர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
இதைப் பலமுறை எச்சரித்தும் குடிபோதையில் இருந்த ஆசாமி மீண்டும் மீண்டும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பெண் செருப்பை கழற்றி பேருந்திலேயே அடிக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால், அப்பேருந்தில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு பேருந்து சென்றது. அப்போது, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது அந்த காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.