போன் மூலம் மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
பள்ளி மாணவிக்கு போனில் ஆபாச பதிவுகளை அனுப்பி துன்புறுத்தியதாக போலீசார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
உடுமலை அருகே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (37). இவர் கரட்டுமடம் அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழாசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இவர் தன்னிடம் படிக்கும் ஒரு அழகான மாணவி மீது ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து, அந்த மாணவியை எப்படியாவது தன்னுடைய வலையில் விழ வைக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதனால், அந்த மாணவியின் போன் நம்பரை ரகசியமாக வாங்கி அவருக்கு அடிக்கடி ஆபாச மெஸேஜ் அனுப்பி வந்துள்ளார்.
மேலும், வாட்ஸ் ஆப் வாயிலாக பாலியல் ரீதியான ஆபாச பதிவுகளை அனுப்பி, தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், மனம் நொந்துபோன மாணவி, திருப்பூர் 'சைல்டு லைன்' எண்ணுக்கு புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்குமாரின் மொபைல் போனிலிருந்து மாணவிக்கு பல ஆபாச பதிவுகளை அனுப்பியது உறுதியானது.
இதனையடுத்து, திருப்பூர் 'சைல்டு லைன்' மைய ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் புகார் அடிப்படையில், உடுமலை மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அசோக்குமாரை நேற்று கைது செய்தனர்.