திருமணமான 5 மாதத்தில் தம்பதி தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாத்தில் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெம்மேலி, திப்பியக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (31) – அஜிதாவுக்கு (26) 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை உயிரிழந்த நிலையில், பிரபாகரன் தனது மனைவி மற்றும் தாயுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். மகேஷ்வரி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பிரபாகரனின் தாய் மகேஷ்வரி வேலைக்கு சென்றுள்ளார். அவரது உறவினர் பிரபாகரனை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தனர்.
அப்போது, வீட்டில் பிரபாகர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவர் அருகில் அஜிதா விஷம் குடித்த நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர், உடனடியாக பாப்பாநாடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 5 மாதத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.