‘ஏ.. அது என் ஆளு..’ ஒரு இளைஞனுக்காக பட்டப்பகலில் நடுரோட்டில் அடித்துக் கொண்ட மாணவிகள் - வைரலாகும் வீடியோ
ஒரு இளைஞருக்காக 2 பள்ளி மாணவிகள் பட்டபகலில் நடுரோட்டில் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்டு கட்டி உருண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் போலீஸ் வரைக்கும் சென்று பெற்றோர்களை வரவழைத்து அவர்களுடன் மாணவிகளை அனுப்பி வைத்துள்ளனர். ஆந்திர மாநிலம், விசாகபட்டினம், வெவ்வேறு பள்ளிகளில் மாணவிகள் 2 பேர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒரே இளைஞரை காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞனுடன் அந்த மாணவி போய்க்கொண்டிருந்தபோது, இன்னொரு மாணவி பார்த்துள்ளனர். உடனே ஓடிப்போய், ‘அவன் என் காதலன்... நீ எப்படி அவனுடன் செல்லலாம்’ என்று கேட்டு சண்டை போட்டுள்ளார்.
பதிலுக்கு அந்த மாணவி, ‘அவன் என் காதலன் நீ எப்படி அதை கேட்கலாம் ’ என்று கூறியுள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.
ஒருவரின் தலைமுடியை ஒருவர் பிடித்து இழுத்துக் கொண்டு சாலையில் கட்டி உருண்டு உள்ளனர். இதை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதை அடுத்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு 2 மாணவிகளுக்கும் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மாணவிகளை பெற்றோருடன் அனுப்பி வைத்த பின்னர் இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் மாணவிகள் கட்டி உருண்டதை இளைஞர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.