மது விற்பனையகத்திற்கு வந்த மதுப்பான பெட்டி - திறந்து பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி
கோவையில் மதுபான கடை ஒன்றிற்கு வந்த மதுபெட்டிக்குள் பாம்பு ஒன்று இருப்பதை கண்ட ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை சரவணம்பட்டி அருகே ப்ரோசோன் என்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் ‘எலைட்’ மது விற்பனையகம் செயல்பட்டு வருகிறது.
இந்த விற்பனையகத்திற்கு ‘பீர்’ மது வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அப்போது, அதன் ஒரு பெட்டியை திறந்த பார்த்த போது, அதற்குள் சுமார் 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்தது.
இதனை பார்த்த டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அந்தப் பாம்பை பிடித்த ஊழர்கள் அதனை அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். விற்பனைக்காக வந்த மது பெட்டியில் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.