பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் பரபரப்பு

samugam-shooting-shocking
By Nandhini Jan 25, 2022 11:19 AM GMT
Report

பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு பயந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி சூடு பயிற்சி மையம் இருக்கிறது. இந்த துப்பாக்கி மையத்தில் அவ்வப்போது துப்பாக்கிசூடு பயிற்சி நடைபெற்று வரும்.

இந்நிலையில், நேற்று அந்த மையத்தில் துப்பாக்கிச் சூடு பயிற்சி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக நேற்று சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்துள்ளது.

குண்டு பாய்ந்த சத்தத்தத்தோடு பாய்ந்தபோது, அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியில் இருந்ததால், நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இது தொடர்பாக போலீசார் துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, புதுக்கோட்டையில், துப்பாக்கிசூடு மையத்திலிருந்து குண்டு பாய்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் பரபரப்பு | Samugam Shooting Shocking