பெண்ணை பலாத்காரம் செய்து, அடித்து, ஆடைகளை கிழித்து, தலைமுடி வெட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பல் - அதிர்ச்சி வீடியோ வைரல்
பெண் ஒருவரை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன் இல்லாமல், அப்பெண்ணின் தலைமுடியை வெட்டி, அடித்து துன்புறுத்தி, ஆடைகளை கிழித்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லி, ஷாதரா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான அப்பெண்னை இந்த அளவுக்கு அவமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டெல்லி போலீசார், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பெண் முன்விரோதம் காரணமாக இப்படி ஒரு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இந்த இளைஞரின் மரணத்திற்கு இந்த பெண் தான் காரணம் என்று நினைத்த அப்பகுதியினர் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதி பெண்கள் கும்பலாக சேர்ந்து, அப்பெண்ணை தாக்கி, ஆடைகளை கிழித்து, அடித்து உதைத்து வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அப்படி ஊர்வலமாக கூட்டிச் செல்லும்போது, அங்கிருந்த சக பெண்கள் கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டாடி உள்ளனர். இக்கொடூர சம்பவம் தொடர்பாக 4 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி துணை ஆணையர் சத்திய சுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து, உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு டெல்லி காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது.
குடியரசு தினமான நேற்று பட்டப்பகலில், பலர் முன்னிலையில், பெண் ஒருவர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, அடித்து உதைத்து, அவரின் உடைகளை கிழித்து, தலைமுடியை வெட்டி, முகத்தில் கருப்பு மை பூசி பெண்களாலேயே ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அதிர்ச்சி வீடியோ -
कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3
— Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022