அமெரிக்காவுக்கு குறுக்கு வழியில் போன குடும்பம் - அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

samugam shocking news family death USA Dreams
By Nandhini Jan 26, 2022 08:40 AM GMT
Report

அமெரிக்கா செல்லும் ஆசையில் பனியில் உறைந்து ஒரு குடும்பமே உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத், டிங்குஜ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ். இவர் ஒரு ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வைஷாலி. இந்த தம்பதிகளுக்கு விஹாங்கி மற்றும் தார்மிக் பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் வசதியாக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜகதீஷ் குடும்பம் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளனர்.

அமெரிக்காவில் செட்டில் ஆவது, ஒரு தன்மானப் பிரச்சினையாக அக்கிராமத்தில் பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் செட்டில் ஆகவில்லை என்றால், அது குடும்பத்துக்கு அவமானம் என அக்கிராமத்தினர் கருது வந்துள்ளனர்.

இந்நிலையில், எப்படியாவது அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிட வேண்டும் என்று புறப்பட்டிருக்கிறது ஜகதீஷ் குடும்பம்.

இதனால், சுமார் 65 லட்ச ரூபாயை ஏஜண்டுகளுக்குக் கொடுத்து எப்படியாவது அமெரிக்கா செல்ல குறுக்கு வழியில் கனடா சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல புறப்பட்டுள்ளது ஜகதீஷ் குடும்பம்.

ஆனால், அமெரிக்கா போவதற்கு பதிலாக கனடா-அமெரிக்க எல்லையிலேயே அவர்கள் குடும்பமாக பனியில் உறைந்து உயிரிழந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

ஜகதீஷ் கிராமத்திலிருந்து வேறு பலரும், அமெரிக்கா செல்வதற்காக, கனடா சென்று, அங்கிருந்து எல்லையைக் கடந்து நடந்தே அமெரிக்காவுக்கு புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் என்ன ஆனார்கள் என்பதும் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.