திடீரென்று கண் திறந்த ஐயப்பன் சிலையால் பரபரப்பு - வைரல் வீடியோ

viral video samugam open god eyes
By Nandhini Dec 30, 2021 07:18 AM GMT
Report

கோவை மாவட்டத்தில், செல்வபுரம் தில்லை நகரில் மணிகண்ட சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் கார்த்திகை மாதத்தை ஒட்டி சபரி மலை கோவிலுக்கு மாலை அணிந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது. நடைப்பெற்ற இந்த பூஜையில், சுமார் 3000-க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதில் ஒரு சிலர் சுவாமிக்கு நடைபெற்ற பூஜைவை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதில், ஐயப்பன் சிலை கண்விழிப்பது போன்ற காட்சி ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

உடனே ஆச்சரியத்தில் உறவினர்களிடம் இதைப்பற்றி தெரிவிக்க அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிடவும் வைரலாகியுள்ளது. தற்போது அப்பகுதி மக்கள் ஐயப்ப சுவாமி கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.