கள்ளக்காதலனுக்காக தூங்கிய குழந்தை மீது தீ வைத்து கொளுத்திய கொடூரத் தாய் - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (40). இவருடைய கணவர் பால்வண்ணன். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முதல் கணவர் பால்வண்ணன் வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார்.
இதனையடுத்து, ஜெயலட்சுமிக்கு மைத்துனர் துரைராஜ் வீட்டுக்கு தேவையான உதவிகளை செய்து வந்திருக்கிறார். இதனால், இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டது.
இவர்களுடைய இந்த நெருக்கம் பால்வண்ணனுக்கு தெரிந்து இருவரையும் கண்டித்திருக்கிறார். இதனால், கணவர், மகள் ஆகியோரை விட்டுவிட்டு தன் கணவரின் தம்பி துரைராஜுடன் மும்பைக்கு ஓடிவிட்டார் ஜெயலட்சுமி. இதனால், பேத்தியை பாட்டி வளர்த்து வந்திருக்கிறார். இதனிடையே மும்பைக்கு சென்ற ஜெயலட்சுமி, துரைராஜை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு பவித்ரா (10) என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஜெயலட்சுமியின் நடத்தையில் துரைராஜ்ஜிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், ஜெயலட்சுயிடம் சண்டை போட்டுக்கொண்டு துரைராஜ் தனியாக சென்றுவிட்டார். மும்பையில் ஜெயலட்சுமிக்கு எந்த ஆதரவும் இல்லாததால், ஜெயலட்சுமி, மகள் பவித்ராவுடன் சென்னைக்கு திரும்பி வந்துள்ளார்.
இதனையடுத்து, ஜெயலட்சுமி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே மனைவியை விவாகரத்து செய்து தனியாக வசித்துவரும் லாரி டிரைவர் பத்மநாபனுடன் ஜெயலட்சுமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருவொற்றியூர், சாத்துமாநகரில் 2வது கணவருக்கு பிறந்த பவித்ராவுடன் குடியேறினார்கள். 3-வது கணவர் பத்மநாபன் மூலமாக ஜெயலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் பிறந்தனர். இவர்கள் 3 பேரையும் ஜெயலட்சுமி கவனித்து வந்துள்ளார்.
ஜெயலட்சுமியின் நடத்தை மீது பத்மநாபனுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்தபோதெல்லாம் இருவருக்கும், ஜெயலட்சுமிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த பத்மநாபன், ‘நீ வேறு யாருடனும் கள்ளக்காதலில் ஈடுபடவில்லை என்றால், உன் 2வது கணவருக்கு பிறந்த குழந்தை பவித்ராவின் தலையில் தீ வைத்து கொளுத்து பார்ப்போம்’ என்று கூறி இருக்கிறார்.
இதனையடுத்து, சற்றும் தயங்காமல் ஜெயலட்சுமி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மகள் பவித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பவித்ரா உடல் முழுவதும் தீ பரவி சிறுமி அலறித் துடித்தாள்.
இதைப் பார்த்து திடுக்கிட்ட ஜெயலட்சுமி, பவித்ராவின் உடலில் பெட்ஷீட்டை போர்த்தி தீயை அணைத்தப்படி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பலத்த தீக்காயம் அடைந்த பவித்ராவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். 80% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பவித்ரா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயலட்சுமி, பத்மநாபன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3வதாக திருமணம் செய்தவருடன் உள்ள அன்பை நிரூபிக்க பெற்ற மகளையே தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது