ஹேமமாலினியின் கன்னத்தை குறிப்பிட்ட சர்ச்சைப் பேச்சு - மன்னிப்பு கேட்ட அமைச்சர்
‘தனது தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை ஹேமமாலினியின் கன்னம்போல் உள்ளது’ என்று மகாராஷ்டிர மாநில அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுது.
இதனையடுத்து, தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மகாராஷ்டிர அமைச்சரும், சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாப்ராவ் பாட்டீல், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசினார்.
அப்போது, எதிர்க்கட்சியினர் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நேரில் வந்து பார்க்கவேண்டும் என்றும் அவை, நடிகை ஹேமமாலினியின் கன்னம்போல் இல்லை என்று அவர்கள் கருதும் பட்சத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகவும் அவர் பேசினார்.
அமைச்சர் பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த பேச்சு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
குலாப்ராவ் மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக மாநில பெண்கள் நல ஆணையத்தின் தலைவர் ருபாலி சகான்கர் எச்சரித்தார்.
இதனையடுத்து, அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.