பூங்காவில் வேண்டுமென்று சிங்கத்தை சீண்டி தொந்தரவு செய்த இளைஞர் - அடுத்து நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
ஐதராபாத் உயிரியல் பூங்காவில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து சிங்கத்தை இளைஞர் ஒருவர் சீண்டி இருக்கிறார். இதனையடுத்து, அந்த இளைஞரை பிடித்த பூங்கா ஊழியர்கள் அவரை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேரு உயிரியல் பூங்கா இருக்கிறது. இந்த பூங்காவில், ஆப்பிரிக்க சிங்கம் இருந்த பகுதிக்குள் இளைஞர் ஒருவர் தடையை மீறி நுழைந்து சுற்றி திரிந்திருக்கிறார்.
இது குறித்து பூங்கா ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, உடனே விரைந்து சென்ற ஊழியர்கள் 31 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும், அவர் மீது சிங்கத்தை தொந்தரவு செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த நபர் ஜி சாய் குமார் என்பது தெரியவந்தது. அவர் சிங்கத்தை சீண்டும்போது, மக்கள் கூச்சலிட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
A man was enters into the #Lion enclosure, walking on the boulders of #AfricanLion moat area, at #NehruZoologicalPark, #Hyderabad.
— Surya Reddy (@jsuryareddy67) November 23, 2021
The person was rescued and caught by the #zoo staff and handed over to Bahadurpura police. pic.twitter.com/RO3TW2fh3G