உ.பி.யில் கல்லூரிக்குள் நுழைந்த சிறுத்தை - மாணவன் மீது ஆக்ரோஷ தாக்குதல் - திக் திக் வீடியோ வைரல்
உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் புகுந்த சிறுத்தை ஒன்று மாணவனை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் சவுத்ரி நிஹால் சிங் இண்டர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில், சிறுத்தை ஒன்று நுழைந்தது. பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்தபோது, வளாகத்தில் இருந்தவர்கள் பலர் பீதியில் சிதறி ஓடினார்கள். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, சிறுத்தையை பார்த்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அப்போது மாணவன் ஒருவரை ஆக்ரோஷத்துடன் சிறுத்தை தாக்கியது. இதில், அந்த மாணவன் காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த மாணவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, வகுப்பறையில் சிறுத்தைப்புலி உலா வரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#watch: A student of class X was attacked by a #leopard while he was entering his class at Chaudhary Nihal Singh inter college in #Aligarh’s Chharra area around 8:30 am today. The student has been sent to a hospital for treatment. Rescue operation in on. pic.twitter.com/za1Iee7fSJ
— Anuja Jaiswal (@AnujaJaiswalTOI) December 1, 2021
#update: the rescue operation which started around 10 am, lasted for over 9 hours & the leopard was finally evacuated with assistance from personnel of @WildlifeSOS pic.twitter.com/WbXvFHCJAV
— Anuja Jaiswal (@AnujaJaiswalTOI) December 1, 2021