கோவை மாணவி தற்கொலை - ஆசிரியர் மிதுனை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கோவை மாணவி தற்கொலை சம்பந்தமாக ஆசிரியர் மிதுனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் மிதுனை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த கோவை போக்சோ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் போலீசார் கைது செய்தனர்.
தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கைதான ஆசிரியர் மிதுனை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினார்கள்.
இந்நிலையில், தனையடுத்து, ஆசிரியர் மிதுனை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.