முதுகுளத்தூர் மணிகண்டன் கடைசியாக பேசும் அதிர்ச்சி வீடியோ - கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கீழத்தூவல் காவல் நிலையத்தில், கடந்த 4ஆம் தேதி இரவு போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக கூறப்படும் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் மணிகண்டன், வாகன சோதனையின்போது வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், அவரை மடக்கி பிடித்த போலீசார் ஏன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாய் என விசாரிக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ காட்சியில் போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர் மணிகண்டன் பதில் அளித்துள்ளார். அப்போது தமக்கு பின்னால் அமர்ந்து வந்த நண்பர் சஞ்சய் என்பவர் என் மீது போலீசில் வழக்கு உள்ளது. எனவே, பைக்கை நிறுத்தாமல் செல் என்று சொன்னதால்தான் நான் நிறுத்தாமல் சென்றேன் என அவர் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.
இதோ அந்த அதிர்ச்சி வீடியோ இதோ...