கள்ளக்காதலியின் கணவரை பார்த்துடன் 5-வது மாடியிலிருந்து குதித்த வாலிபர் பலி
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோசின் (29). இவருக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்பெண் தனது சிறு வயது மகளை அழைத்து கொண்டு மோசினுடன் கடந்த 2 வருடங்களுக்கு முன் தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெப்பூரில் உள்ள பிரதாப் நகரில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்நிலையில், திருமணமான பெண்ணின் கணவர் மனைவியையும் மகளையும் தேடி அலைந்துள்ளார்.
இவர்கள் ஜெய்ப்பூரில் இருக்கும் தகவல் கணவருக்கு செல்ல, அவர்களை சந்திக்க அங்கு வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அப்பெண்ணின் கணவர், மோசினுடன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார்.
அவரை பார்த்ததும் பீதியடைந்த மோசின், வீட்டின் பால்கனியிலிருந்து குதித்துவிட்டார். இதனால், படுகாயம் அடைந்த அவரை அப்பெண் எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மோசின் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.