பிரபல பத்திரிக்கையாளர் வினோத் துவா உயிரிழந்தார்

samugam-death
By Nandhini Dec 05, 2021 10:41 AM GMT
Report

டெல்லியில் உடல் நலக் குறைவால் பிரபல பத்திரிகையாளர் வினோத் துவா (67) நேற்று காலமானார்.

துார்தர்ஷன், என்.டி.டி.வி., உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய வினோத் துவா, 1996ம் ஆண்டு இந்திய மின்னணு துறையின் முதல் பத்திரிகையாளர் என்ற சிறப்புடன், சிறந்த பத்திரிகையாளருக்கான விருது பெற்றவர்.

இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 2008ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்த ஆண்டு கொரோனாவால் வினோத் துவாவும், அவரது மனைவி பத்மாவதியும் பாதிக்கப்பட்டனர்.

ஜூனில் பத்மாவதி உயிரிழந்தார். வினோத் துவா உடல் நலம் தேறினாலும் கொரோனாவின் பின் விளைவுகளால் அடிக்கடி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

வினோத் துவா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், கலையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   

பிரபல பத்திரிக்கையாளர் வினோத் துவா உயிரிழந்தார் | Samugam Death

பிரபல பத்திரிக்கையாளர் வினோத் துவா உயிரிழந்தார் | Samugam Death