பிரபல எழுத்தாளர் மானு பண்டாரி உயிரிழந்தார்

samugam-death
By Nandhini Nov 16, 2021 03:20 AM GMT
Report

ஹரியானாவின் பிரபல இந்தி எழுத்தாளர் மானு பண்டாரி உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார்.

1931ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பான்பூரில் மானு பண்டாரி பிறந்தார். இவரது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். மேலும், இவர் சமூக சீர்திருத்தவாதியாக இருந்தார். பண்டாரி சிறந்த இந்திய எழுத்தாளரும், ஆசிரியருமான ராஜேந்திரன் யாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஹரியான மாநிலத்தின் சிறந்த எழுத்தாளரான மானு பண்டாரி கடந்த சில காலங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது இறுதி சடங்கு நாளை டெல்லியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

பிரபல எழுத்தாளர் மானு பண்டாரி உயிரிழந்தார் | Samugam Death