திருமணத்திற்கு மறுப்பு - காதலி அந்தரங்க போட்டோ சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட இளைஞர் கைது

arrested imprisonment samugam
By Nandhini Dec 30, 2021 07:14 AM GMT
Report

மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் அஜ்மத் பைசல் (25). இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.

அதே நிறுவனத்தில், 22 வயது இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அஜ்மல் இளம்பெண்ணின் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது, இவர்கள் இருவருக்கள்ளம் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொண்ட அந்த வாலிபர், இளம்பெண் வீட்டில் குளிக்கும்போது, உடைமாற்றும்போது, தனது செல்போனில் வீடியோ எடுத்து செல்போனில் வைத்துள்ளார்.

இதை அறிந்த பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரித்தனர். இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அஜ்மத்பைசல் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், பெண் வீட்டார் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அஜ்மத்பைசல், தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், உங்கள் பெண்ணை ஆபாசமாக எடுத்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதை பெண் வீட்டார் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அப்படியே விட்டுவிட்டனர்.

இதனால் அஜ்மல், இளம்பெண்ணின் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், இளம்பெண்ணின் வீடியோவை அந்த இளைஞர் வெளியிட்டது உறுதியானது. இதனையடுத்து, அஜ்மத் பைசல் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதன் பின்பு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.