ஏமாற்றிய காதலனின் முகத்தில் ஆசிட் வீசிய காதலி - பார்வை பறிபோனது - பரபரப்பு சம்பவம்
தன்னை காதலித்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்ததால் கோபம் அடைந்த காதலி காதலன் மீது ஆசிட் வீசியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலி ஊற்றிய ஆசிட்டால் இளைஞரின் கண் பார்வை பறிபோயுள்ளது. கேரளா, திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (27). இவர் ஷீபா என்ற 35 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். சமூக வலைத்தளம் மூலம் இருவரும் முதலில் நண்பர்களாக அறிமுகமானார்கள்.
நாளடைவில் இவர்களது நட்பு காதல் மாறியது. இதனால், இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷீபா அருண்குமாரிடம் கேட்டு வந்துள்ளார்.
ஆனால், மறுப்பு தெரிவித்து வந்த அருண்குமார், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதை அறிந்ததும் ஷீபா கடந்த 16ம் தேதி அன்று இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி பகுதியில் இருக்கும் செயின்ட் ஆண்டனி தேவாலயம் அருகே அருண்குமாரை அழைத்து பேசினார்.
அப்போது, தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியாக கூறியுள்ளார் அருண்குமார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண்குமார் முகத்தில் வீசி இருக்கிறார்.
இதில் அருண்குமார் துடிதுடித்து அலறியுள்ளார். அக்கம், பக்கத்தினர் இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து, அவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்குமார், ஒரு கண் பார்வை பறிபோயிருக்கிறது. இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றினர். அதில் அருண்மார் மீது ஆசிட் வீசுவது பதிவாகி உள்ளது. இதனையடுத்து, ஷீபாவை போலீசார் கைது செய்துள்ளனர். காதலன் மீது ஆசிட் வீசும் சிசிடிவி காட்சிகள் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.