பீகாரில் வெடித்து சிதறிய பாய்லர் - 6 பேர் பரிதாப உயிரிழப்பு!
accident
fire
samugam
By Nandhini
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநிலம், முஸாபர்பூரில் நூடுல்ஸ் தயாரிப்பு ஆலையில் கொதிகலன் (பாய்லர்) வெடித்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த மேலும் 6 தொழிலாளர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நூடுல்ஸ் தொழிற்சாலையில் இன்று காலை 10 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பிரவன் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.