கல்யாண வீட்டில் சாப்பிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி - நடந்தது என்ன?

samugam
By Nandhini Nov 14, 2021 05:28 AM GMT
Report

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சாப்பாடு சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவில் உள்ள அலடா ஹள்ளி என்னும் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமண விழா ஒன்று நடந்தது. இந்த திருமண விழாவில் அப்பகுதியிலுள்ள மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, திருமண விழாவில் தயாரித்து வைத்திருந்த உணவுகளை சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் 50 பேருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக சனிக்கிழமை காலை ஷிவமொக்கா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவருக்குமே ஃபுட் பாய்சன் ஆகி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கல்யாண வீட்டில் சாப்பிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி - நடந்தது என்ன? | Samugam