80 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல வாந்தி பறிமுதல் : சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட 5 பேர் அதிரடி கைது!

samugam
By Nandhini Aug 11, 2021 03:43 PM GMT
Report

கர்நாடகாவில் சட்டத்துக்கு விரோதமாக விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ. 80 கோடி மதிப்புள்ள 80 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாசனை திரவியத்துக்கு பயன்படுத்தப்படும் திமிங்கலத்தின் வாந்தி வெளிநாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. 1 கிலோ, 1 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூரு பாகல்குண்டே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், மர்ம நபர்கள் சிலர், சட்டத்துக்கு விரோதமாக, Ambergris எனும் திமிங்கலத்திடமிருந்து எடுக்கப்படும் ஒரு திடப்பொருளை (திமிங்கலத்தின் வாந்தி) விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக சி.சி.பி., இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல், சிறப்பு குழுவை அமைத்து, சோதனை மேற்கொண்டது.

நடத்தப்பட்ட சோதனையில், சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த, 80 கிலோ திமிங்கல எச்சம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, பெங்களூரைச் சேர்ந்த, முஜீப் பாஷா (48), முகமது (45), குலாப் சந்த் (40), சந்தோஷ் (31), ஜகனாத் ஆச்சார் (52) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  

80 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல வாந்தி பறிமுதல் : சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட 5 பேர் அதிரடி கைது! | Samugam