வயிற்றை கிழித்து கற்கள் நிரப்பி கொடூரமாக கொலை செய்த கொடூரன் - விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்!

samugam
By Nandhini Aug 04, 2021 01:20 PM GMT
Report

கேரள மாநிலத்தில் வயிற்றுக்குள் கற்கள் நிரப்பிய நிலையில் ஆணின் சடலம் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கும்பளங்கி பகுதியில் சகோதரரை காணவில்லை என்று போலீசாருக்கு ஒருவர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்தின் பெயரில் குடியிருப்பு அருகாமையில் புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

இது குறித்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காணாமல் போன நபர் தான் ஆன்றனி லாசர் என்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் பிஜு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, விசாரணையில் பிஜு அளித்த வாக்குமூலத்தை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பிஜு கூறுகையில், சில காலங்களுக்கு முன்பு ஆன்றனியும், அவரது சகோதரரும் சேர்ந்து என்னை துன்புறுத்தி, என்னுடைய கை உடைத்தனர். இந்த பகை என் மனதில் எப்போதுமே இருந்துக்கொண்டிருந்தது. அதனால், ஆன்றனியை நான் கொலை செய்ய திட்டமிட்டேன்.

மேலும், கொலை செய்த பின்னர் ஆன்றனியின் வயிற்றுக்குள் கற்கள் நிரப்பி, அதன் பிறகு அவனை புதைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

அதுமட்டுமின்றி, ஆன்றனியின் வயிறு பிளந்த பிறகு உள்ளுறுப்புகளை எடுத்து பைக்குள் போட்டு அதை குளத்துக்குள் வீசிட வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் செய்து முடித்தேன்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று நான் ஆன்றனியை கடந்த மாதம் 9ம் தேதி தமது குடியிருப்புக்கு அழைத்தேன்.

ஆன்றனியும் நான் கூப்பிட்டதும் வந்தான். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினோம். பிறகு நானும், என்னுடைய நண்பர்களும் சேர்ந்து பிஜுயை கொலை செய்து, என் குடியிருப்பு வெளியே, வயக்காட்டில் புதைத்தோம் என்று விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தான்.

வயிற்றை கிழித்து கற்கள் நிரப்பி கொடூரமாக கொலை செய்த கொடூரன் - விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்! | Samugam