மாமனார் முன்பு நிர்வாணமாக நிற்க வைத்து கொடுமை - மனமுடைந்த மருமகள் கண்ணீருடன் எடுத்த முடிவு!
ராஜஸ்தானின் பாகூரை சேர்ந்தவர் பைருலால். இவருடைய மகள் பிரியா (18). இவருக்கும், முகேஷ் சான்ஸி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணம் முடிந்த 20 நாட்களில் வரதட்சணை கேட்டு முகேஷின் தாய்- தந்தை பிரியாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, பெற்றோர் வீட்டுக்கு சென்ற பிரியாவை, முகேஷ் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். மறுபடியும், சில நாட்கள் கழித்து மீண்டும் பிரியாவை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த தேதி பிரியா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பாக அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், மாமனார் முன்பு நிர்வாணமாக நிற்க வைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பிரியாவின் மாமனார், மாமியார் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.