நாட்டின் கலாசாரம் சிதையும் : தன்பாலின திருமணங்களுக்கு தடைபோட்ட இந்திய பார்கவுன்சில்
தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று இந்திய பார் கவுன்சில் தீர்மானம் போட்டுள்ளது.
தன்பாலின திருமணம்
உலகம் முழுவதும் தற்போது தன் பாலின திருமணங்களுக்கு சில நாடுகள் அங்கீகாரம் கொடுத்து வரும் நிலையில் கடந்த ஆண்டு இரண்டு தன்பாலின திருமண தம்பதிகள் தங்களின் திருமண உரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
பல்வேறு நாடுகளிலும் தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளதால் இந்தியாவிலும் இந்த சட்டம் அமலுக்கு வரலாம் என கூறப்பட்ட நிலையில் , பார் கவுன்சில் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது . இது தொடர்பாக இந்திய பார் கவுன்சில் தலைவர் மணன் குமா மிஸ்ரா கூறுகையில் :
இந்திய கலாச்சாரம் சிதையும்
தன்பாலின திருமணங்களால் நாட்டின் கலாசாரம் மற்றும் சமூக கட்டமைப்பு சிதையும் என்றார். எனவே உச்சநீதிமன்றம் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், முக்கிய பிரச்னையான இவ்விவகாரத்தை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் வசம் விட்டுவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
