நாகசைதன்யா நினைவாக உடலில் கண்ட இடங்களில் பச்சைக் குத்திய சமந்தா - என்ன செய்ய போகிறார்?

actresssamantha actornagachaitanya
By Petchi Avudaiappan Oct 20, 2021 12:04 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை சமந்தா தன் உடலில் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் நினைவாக பச்சைக்குத்திய நிகழ்வுகள் ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. 

பிரபல நடிகையான சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால்  நான்காவது திருமண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அக்டோபர் 2 ஆம் தேதி கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த தகவல் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கணவரை பிரிந்த சமந்தா தற்போது தொடர்ந்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இதனிடையே அவர் நாகசைதன்யா மீது கொண்ட காதலால் தன் உடம்பில் யாரும் பார்க்க முடியாத இடத்தில் அவரின் பெயரை பச்சை குத்தியிருந்தார். 

நாகசைதன்யா நினைவாக உடலில் கண்ட இடங்களில் பச்சைக் குத்திய சமந்தா - என்ன செய்ய போகிறார்? | Samanthas Chay And Ymc Tattoos

பல நாள் ரகசியமாக் இருந்த இச்சம்பவத்தை ஒருநாள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும் நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடித்த ஏ மாய சேசாவே படம் தன் வாழ்வில் முக்கியமானது என்பதால் அதை YMC என்று தன் முதுகு பகுதியில் பச்சை குத்தினார்.

தற்போது நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா அந்த இரண்டு டாட்டூக்களையும் அழித்துவிடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாக சைதன்யாவின் பெயரை ஆசை ஆசையாய் பச்சை குத்தினாரே, தற்போது அதை அழிக்க வேண்டுமானால் எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று சமந்தாவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.