பொதுமக்களுடன் சேர்ந்து சுவாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

dharshan actress samantha visits tirupati temple visit picture goes viral
By Swetha Subash Dec 12, 2021 07:31 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக உயர்ந்து தி ஃபேமிலி மேன் 2 தொடரில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருப்பவர் நடிகை சமந்தா.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.

இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என இதுவரை தெறியவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்திற்கு பின் வெளியே வந்த சமந்தாவை சூழ்ந்த ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அவரிடம் பேச முயன்ற போது சமந்தா பதில் ஏதும் அளிக்காமல் கடந்து சென்றார்.

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு திருப்பதி ஏழுமலையானை சமந்தா தரிசிப்பது இதுவே முதல் முறையாகும்.

விஐபி தரிசனத்தில் செல்லாத சமந்தா 300 ரூபாய் டிக்கெட்டில் பொதுமக்களுடன் சேர்ந்து சென்று தரிசனம் செய்தார்.