‘கடைசிவரைக்கும் நீ இப்படியே இருந்துதான் சாகப்போற’ - தக்க பதிலடி கொடுத்த சாம்; ஆதரவு கரம் நீட்டும் ரசிகர் பட்டாளம்!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்த படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யசோதா திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
நடிகை சமந்தா கடந்த 2017-ல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக காதல் கணவரான சைதன்யாவை பிரிவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.
விவாகரத்துக்கு பின் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் ஆன்மீக சுற்றுலா, வெளிநாடுகளுக்கு பயணம் செய்தல், ஒர்க்கவுட், ஷூட்டிங் என படு பிஸியாக தன்னை ஈடுப்படுத்தி வருகிறார் சமந்தா.
இவர் அன்மையில் தனது செல்லப்பிராணியான நாயுடன் ஒர்க்கவுட் முடித்துவிட்டு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தோடு இவ்ளோ நாள் இதை மிஸ் செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
சமந்தாவின் இந்த பதிவிற்கு ட்விட்டரில் பதிலளித்த ரசிகர் ஒருவர், கடைசி வரை இப்படி நாய், பூனையுடன் தான் இருந்து சாகப்போகிறார் என கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, அப்படி ஒன்று நடந்தால் என்னை நான் அதிர்ஷ்டசாலியாக கருதுவேன் என சமந்தா பதிலளித்தார்.
இதனைதொடர்ந்து அந்த ரசிகர் தான் பதிவிட்ட கமெண்ட்டை டெலீட் செய்துவிட்டார்.
இதனை ரசிகர்கள் பலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தும் சமந்தாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.