instagram -ல் கணவர் பெயரை நீக்கிய பிரியங்கா? சர்ச்சையும், சமந்தாவின் கமெண்ட்டும்
பாலிவுட் , ஹாலிவுட் என தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா தனது சமூகவலைதள பக்கங்களில் பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் நிக் ஜோனஸின் பெயரை எடுத்தது பேசுபொருளானது.
இதனால், தனது கணவர் நிக் ஜோனஸின் பெயரை பிரியங்கா சோப்ரா பிரிவதாக வதந்திகள் வெளியாகிய நிலையில், அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
ஆம், அமெரிக்காவில் பிரபலமான ரோஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா இந்நிகழ்ச்சியின் டீஸர் ஒன்றை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், , கணவர் ஜோனஸுக்கும் அவரின் சகோதரர்களுக்கும் இரவு உணவுக்காக நல்ல ரோஸ்ட் (வறுவல்) வாங்கி வந்துள்ளேன். இது ஜோனஸ் குடும்பத்தினராக இருப்பதற்காக கிடைக்கும் சலுகை என்று பதிவிட்டிருந்தார்.
அந்த டீஸரில் பிரியங்கா சோப்ரா பேசியிருப்பது இது தான் "நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் இந்தியாவில் இருந்து வந்துள்ளேன். என் தேசம் வளமான கலாச்சாரம் கொண்டது.
https://www.instagram.com/tv/CWoBtmrpkWf/?utm_source=ig_web_copy_link
அது நிக் ஜோனஸிடம் இல்லை. எனக்கும் நிக் ஜோனஸுக்கும் 10 வருட வயது வித்தியாசம் உள்ளது. அதனால் நிக்குக்கு 90களின் பாப் கலாச்சாரம் பற்றித் தெரியாது. நான் சொல்லித் தருவேன்.
அவர் எனக்கு டிக்டாக் பற்றி சொல்லித் தந்துள்ளார். இருவருமே பரஸ்பரம் சில விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம். அப்புறம் நான் நடிப்புத் தொழிலில் எப்படி வெற்றிகரமாக இருப்பது என்பதை நிக் ஜோனஸுக்கு கற்றுத் தருகிறேன்" என்று பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டகிராம் பதிவினை பகிர்ந்துள்ள நடிகை சமந்தா '’அற்புதம்” என்று தலைப்பிட்டுள்ளார்.
சமந்தாவும் தனது கணவரை பிரிவதற்கு முன்பு சமூகவலைதளங்களில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் நாகசைதன்ய அக்கினேனி என்ற பெயரை அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.