அவரும் நானும் ஒரே ரூம்ல இருந்தா இதான் பண்ணுவோம் - நடிகை சமந்தா..!

Samantha Naga Chaitanya
By Thahir Jul 23, 2022 08:41 AM GMT
Report
135 Shares

தனது முன்னாள் கணவர் நாக சைதான்யாவையும், தன்னையும் ஒரே அரையில் அடைத்தால் கூர்மையான ஆயுதங்கள் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

திருமணம் - விவாகரத்து

தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகயைாக இருக்கும் சமந்தா கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவரும் நானும் ஒரே ரூம்ல இருந்தா இதான் பண்ணுவோம் - நடிகை சமந்தா..! | Samantha Ruth Prabhu Latest Speech

இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகவும்,இதற்கு காரணம் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் தான் என்றும் கூறப்பட்டு வந்தது.

குடும்பத்தினர் சமந்தாவை சினிமாவிலிருந்து முழுவதுமாக விலக சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் வற்புறுத்தல்களை சகித்து கொள்ள முடியாத நடிகை சமந்தா, நாக சைதன்யாவை பிரியும் முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.இதையடுத்து இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர்.

இந்த வாழ்க்கையை நான் தான் தேர்ந்தெடுத்தேன்

நடிகை சமந்தா காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்போது அவர் பேசிய சில விஷயங்கள் சமூக வளைத்தலத்தில் வைரலாகி வருகிறது.

அவரும் நானும் ஒரே ரூம்ல இருந்தா இதான் பண்ணுவோம் - நடிகை சமந்தா..! | Samantha Ruth Prabhu Latest Speech

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உடன் பங்கேற்றிருந்தார். நடிகர் நாக சைதன்யாவுடனான திருமண வாழ்க்கையை பற்றி விரிவாக பேசியுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் கரண் ஜோஹர், நாக சைதன்யா கேள்வி ஒன்றில் கணவர் என்று குறிப்பிட அப்போது சமந்தா குறுக்கீட்டு அவர் கணவர் இல்லை முன்னாள் கணவர் என்று குறிப்பிட்டார்.

இந்த பிரிவு குறித்து சமூக வளைத்தலத்தில் வரக்கூடிய ட்ரோல்களை எப்படி கையாள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சமந்தா, சமூக வளைத்தலத்தில் வரக்கூடிய ட்ரோல்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தல.

இந்த வாழ்க்கையை நான் தான் தேர்ந்தெடுத்தேன்.என் வாழ்க்கையை பற்றி பேசும் முழு சுதந்திரத்தை நான் தான் கொடுத்திருக்கேன்.

அப்போ சமூகத்தில் எனக்கு எதிரா எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனால் இப்போ எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயார் என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகை சமந்தா.

நாக சைதன்யாவை விட்டு ஏன் பிரிந்தார் என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் தனியாக கேமராவிற்கு பின் கூறியுள்ளார்.

கூர்மையான பொருட்களை மறைத்து வையுங்கள் 

விவாகரத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கு என்ற கேள்விக்கு ஆரம்ப கட்டத்தில் கஷ்டமாக இருந்ததாகவும்,ஆனால் முன்பு இருந்ததை விட இப்போ வலிமையா உணர்கிறேன்.

இப்போதைக்கு என்னையும், நாக சைதன்யாவையும் ஒரு தனி ரூம்ல அடைத்தால், கூர்மையான அல்லது கனமான பொருட்களை எங்களிடம் இருந்து மறைத்து வைக்கனும் ஏன் என்றால் நாங்கள் அந்த அளவு சண்டை போட நேரிடலாம்.

அவரும் நானும் ஒரே ரூம்ல இருந்தா இதான் பண்ணுவோம் - நடிகை சமந்தா..! | Samantha Ruth Prabhu Latest Speech

நாங்கள் இருவரும் இப்போ வரைக்கும் சமாதானமான மனநிலைக்கு வரவில்லை.ஒரு வேளை எதிர்காலத்தில் இது சரியாகலாம் என்று தெரிவித்தார்.

நான் நாக சைதன்யா குடும்பத்தினரிடம் 250 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாக வதந்தி பரவி கொண்டு வருகிறது.அது முற்றிலும் தவறு என்று கூறியுள்ளார்.