‘’அந்த சம்பவம், என் வாழ்க்கையவே நொறுங்கிடுச்சு’’ - விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தாவும் , தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவரான நாகசைத்தன்யாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு விவாகரத்து குறித்த கூட்டறிக்கையை வெளியிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு சமந்தா மீதான தொடர் குற்றச்சாட்டுகளும் , அவர் மீதான விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகரிக்க தொடங்கியது.
அவ்வாறு வெளியாகும் விமர்சனங்களுக்கு அவ்வபோது அதற்கு பதிலடி கொடுத்து வந்தார் சமந்தா. இந்த நிலையில் இது குறித்து Film Companion உடனான உரையாடலில் வெளிப்படையாக பேசியுள்ளார் சமந்தா.
சமந்தா ரசிகர்கள் வெறுக்கத்தக்க வகையில் சமூக வலைத்தளங்களில் பேசுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் , அது குறித்து மனம் திறந்த சமந்தா “ பொதுவான அன்னுடைய கருத்துக்களும் செயல்களும் ரசிகர்களின் கருத்துக்கு ஏற்ப இல்லாவிட்டால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள்.
தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சனைகளை எப்படி அவர்களுக்கு உணர்த்த முடியும். அவர்கள் நிச்சயம் டிரால் செய்வார்கள் ,உங்களை கஷ்டப்படுத்துவார்கள்.ஆனால் இதே போல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்புதானே” என ரசிகர்களின் விரக்தியை புரிந்தவராய் பதிலளித்துள்ளார் சமந்தா.
மேலும் ரசிகர்கள் தங்களின் விரக்தியை சற்று சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருக்கலாம் என தெரிவித்த சமந்தா, "விவாகரத்து என்பது மிகவும் வேதனையான செயலாகும் அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் வேண்டும் என கூறியுள்ளார்.
அது ஒரு ஒருபுறம் இருக்கட்டும் தனிப்பட்ட முறையில் என் மீதான இந்தத் தாக்குதல் இடைவிடாதது இருக்கிறது. இருப்பினும் இது போன்ற எதையும் என்னை உடைத்துவிட முடியாது எனக் கூறியுள்ளார்.

ஆட்டம் காண்கிறதா இந்திய விமான சேவை - ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு IBC Tamil

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
